search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமுளி மலைச்சாலை"

    தொடர் மழை எதிரொலியாக குமுளி மலைச் சாலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. #Landslide

    கூடலூர்:

    கேரளாவில் கடந்த மாதம் கன மழை பெய்தது. குமுளி மலைச்சாலையிலும் பெய்த கனமழை காரணமாக மாதா கோவில் அருகே இரைச்சல் பாலம் உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு அதிகாரிகள் மணல் மூடையை வைத்து தற்காலிகமாக சாலையை சீரமைத்தனர்.

    தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக கூடலூர், குமுளி, லோயர் கேம்ப் பகுதியில் தொடர்ந்து கன மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாதா கோவில் அருகேயும் இரைச்சல் பாலம் அருகே உள்ள வளைவு பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.

    மேலும் சாலை ஓரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    எனவே பாதுகாப்பு கருதி அனைத்து வாகனங்களுக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் பெய்த கன மழை காரணமாக மணல் மூடைகள் அடித்துச் செல்லப்பட்டது. எனவே கம்பம்மெட்டு சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கூடலூர் பகுதியில் இருந்து குமுளி டீக்கடை, ஓட்டல், பேக்கரி ஆகியவற்றுக்கு பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதே போல் தேயிலை எஸ்டேட் செல்லும் தொழிலாளர்களும் கடந்த சில நாட்களாக வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கம்பம் மெட்டு வழியாக சென்றால் வெகு தூரம் என்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வில்லை. ஒரு சிலர் மட்டும் பைக்குகளில் கம்பம் மெட்டு பகுதிக்கு சென்று வருகின்றனர். தொடர் மழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பால் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். #Landslide

    குமுளி மலைச்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டதால் வியாபாரிகள் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ தொலைவிற்கு மலைச்சாலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தற்காலிக தடுப்புகளான மணல் மூட்டைகள் அடித்து செல்லப்பட்டன.

    எனவே சீரமைப்புக்காக வாகனங்கள் செல்ல அதிகாரிகள் தடைவிதித்தனர். குமுளி பகுதியில் உள்ள ஓட்டல், பேக்கரி மற்றும் டீக்கடைகளுக்கு கூடலூரில் இருந்து பால் கொண்டு செல்லப்படுகிறது.

    வழக்கம்போல் பாலை ஏற்றிக்கொண்டு வியாபாரிகள் மோட்டார் சைக்கிளில் குமுளி நோக்கி மலைச்சாலையில் சென்றனர். லோயர்கேம்ப் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மலைச்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அத்தியாவசிய பொருளான பால் கொண்டு செல்ல அனுமதிக்கவேண்டும் என வியாபாரிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருந்தபோதும் அனுமதி மறுக்கப்பட்டதால் கொண்டு வந்த பாலை நடுரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உயர்அதிகாரிகள் உத்தரவின்பேரில் குமுளி மலைச்சாலையில் செல்ல மோட்டார் சைக்கிளை மட்டும் அனுமதித்தனர். இதனைதொடர்ந்து கேரள பகுதிக்கு பால் கொண்டு செல்லப்பட்டது.

    குமுளி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கன ரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ. தூரத்திற்கு மலைச்சாலை உள்ளது. கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக இரைச்சல் பாலம், கொண்டை ஊசி வளைவு மாதாகோவில் பகுதி ஆகிய பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி சீரமைப்பு பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

    தற்போது திடீரென பெய்த கன மழையினால் மாதாகோவில் அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் வாகனங்கள் சென்றால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை நிரந்தரமாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

    சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் 2 வாரங்களில் முடியும். அதன்பின்பு போக்குவரத்து சீரமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குமுளி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Landslide

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ. தூரத்திற்கு மலைச்சாலை உள்ளது. கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக இரைச்சல் பாலம், கொண்டை ஊசி வளைவு மாதாகோவில் பகுதி ஆகிய பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி சீரமைப்பு பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

    தற்போது திடீரென பெய்த கனமழையினால் மாதாகோவில் அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் வாகனங்கள் சென்றால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை நிரந்தரமாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

    சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் 2 வாரங்களில் முடியும். அதன்பின்பு போக்குவரத்து சீரமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Landslide

    நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் குமுளி மலைச்சாலையில் 8-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

    தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளி, போடிமெட்டு, கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் குமுளி மலைச்சாலையில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது.

    அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்த போது மற்றொரு இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே எப்படியாவது வேலைக்கு சென்றுவிட வேண்டும் என போடி மெட்டு, கம்பம் மெட்டு வழியாக வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது குமுளி மலைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் வாகனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றார்.

    பைக் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் லோயர் கேம்ப்பில் இருந்து குமுளி வரை மோட்டார் சைக்கிளில் ட்ரிப் அடித்து வருகின்றனர்.

    பஸ்களில் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மோட்டார் சைக்கிளில் ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கின்றனர். மேலும் மலைச்சாலையில் 3 முதல் 4 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து போலீசார் எச்சரித்த போதும் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளில் அதிக விலை கொடுத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே அரசு சார்பில் பொதுமக்கள் சென்று வர வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் அதிக ஆட்களை ஏற்றிக் கொண்டு மலைச்சாலையில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
    ×